Home

Nov 04,2012

திரு நாகலிங்கம் மாசிலாமணி

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் தவிடுதின்னியைப் பிறப்பிடமாகவும் வன்னி விசுவமடுவை வசிப்பிடமாகவும் வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு நாகலிங்கம் மாசிலாமணி அவர்கள் 04/11/2012 ஞாயிற்றுக்கிழமை வன்னியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும் சுப்பையா இளையபிள்ளை தம்பதிகளின் மருமகனும் காலஞ்சென்ற இராசபூபதியின் அன்புக் கணவரும் சிவகுமார் (சிவா சுவீடன்) அவர்களின் அன்புத் தந்தையும் சிவசுதர்சினி (சுதா சுவீடன்) அவர்களின் பாசமிகு மாமாவும் அக்சயாவின் அன்பு பேரனும் காலஞ்சென்றவர்களான சிவஞானம், மதியாபரணம் மற்றும் சின்னத்துரை, அனுசம்மா, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07/11/12 புதன் கிழமை காலை 10 மணிக்கு வட்டக்கச்சி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வட்டக்கச்சி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வட்டக்கச்சி, கிளிநொச்சி
 

தொடர்புகளுக்கு:
சிவா (sweeden)+46 723198708

 

Oct 31,2012

திரு விஸ்வலிங்கம் முத்துலிங்கம்

பிறப்பு : 25 மார்ச் 1932   இறப்பு : 31 ஒக்ரோபர் 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 63 சிவகுருநாதர் வீதி, பிறவுண் வீதி யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் முத்துலிங்கம் அவர்கள் 31-10-2012 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் மனோன்மணி(செல்லம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயமலர்(இலங்கை), ஜெயரூபன்(இங்கிலாந்து), ஜெயகரன்(இங்கிலாந்து), ஜெயதரன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தங்கலிங்கம்(ராசா), காலஞ்சென்ற கைலாசப்பிள்ளை, சிவம்(இந்தியா), செல்வம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பாலச்சந்திரன், சோபனா, சஜித்தா, சுதாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற மீனாம்பிகை, மனோன்மணி(சின்னமணி பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகம்மா(கனடா), அருளானந்த சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகானா, கஜானா, ரேணுசா, கிருத்திகா, தேனுஜா, சோபியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-11-2012 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிற்பகல் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி, மகள் — இலங்கை; தொலைபேசி: +94212226329
ஜெயரூபன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085501972
ஜெயகரன்(மகன்) — பிரித்தானியா; தொலைபேசி: +442085442917
ஜெயதரன்(மகன்) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447438259598
தங்கலிங்கம்(சகோதரர் ராசா) — இலங்கை; தொலைபேசி: +94213735894
சிவம்(சகோதரர்) — இந்தியா; தொலைபேசி: +914422422856
செல்வம்(சகோதரர்) — இலங்கை; செல்லிடப்பேசி: +94777979755

 

Sep29,2012

திரு சிவகுரு யோகரட்ணம்

பிறப்பு : 28-07-1958   இறப்பு : 29 - 09 - 2012

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சிவகுரு யோகரட்ணம் அவர்கள் 29-09-2012 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான சிவகுரு யோகவதி தம்பதிகளின் அருமை மகனும், வேதநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், நளாயினியின் அன்புக் கணவரும், அபர்ணா, அஸ்வினின் பாசமிகு தந்தையும், நேசரத்தினம், நேசராணி, யோகராணி, சிவகுமார், சிவமாலினி, மைதிலி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவராஜா, நேசராஜா, ரூபன், உருத்திரகாந்தன், சிவபாலன், நாகதேவி, சுனித்தா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னார் பூதவுடல் OGDEN FUNERAL HOMES (Midland and Sheppard)
இல் திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களும் (மாலை 5:00 PM - 9:00 PM ) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் புதன் காலை 8:00AM - 10: 30 AM மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 256 Kingston Road (Kingsron Rd/ Woodbine Rd) இல் அமைந்துள்ளSt John's Norway Cemetery & Crematorium இல் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

நளாயினி - 416-284-7955
நேசரத்தினம் - 416-817-6573
ரூபன் - 416-571-5632
சிவகுமார் - 416-729-0919
உருத்திரகாந்தன் - 416-312-3223
சிவபாலன் - 905-821-9461

கண்ணீர் அஞ்சலி1 கண்ணீர் அஞ்சலி2 கண்ணீர் அஞ்சலி3 கண்ணீர் அஞ்சலி4 கண்ணீர் அஞ்சலி5 கண்ணீர் அஞ்சலி6

 

Sep20,2012

திரு கதிரேசு காசிலிங்கம்

பிறப்பு : 29 -03 -1930   இறப்பு : 20 - 09 - 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம், அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, பாவற்குளம் 9ம் யுனிற்ரை வதிவிடமாகவும் தற்போது கனடா - ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு கதிரேசு காசிலிங்கம் அவர்கள் 20-09-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு-சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், சொர்ணமனி அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீகரன், தயாபரன், அகிலா, காந்தீபன், பாஸ்கரன், சுதாகரன், சிவகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இதயராணி, கிரிசாம்பாள், இராஜலிங்கம், கோமளாதேவி, சிவரூபி, நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தவமணி, இராசாத்தி, பஞ்சலிங்கம், மற்றும் சித்திரவடிவேல் (France) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னையா, செல்லம்மா, மற்றும் கனகலிங்கம், காலஞ்சென்ற இராசலட்சுமி, மற்றும் நாகம்மா, காலஞ்சென்ற அன்னலட்சுமி, மற்றும் பூவதியம்மா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சரண், சந்தோஸ், ரஜீவன், அபிஷா, ஓவியா, துர்க்கா, பரனிதா, அஷானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-09-2012 சனிக்கிழமை மற்றும் 23-09-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணி முதல் 9:00 மணி வரை 4164 Sheppard Avenue Eastஇல் அமைந்துள்ள OGDEN FUNERAL HOME, (Midland and Sheppard)
இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 24-09-2012 திங்கக்கிழமை காலை 8:00 முதல் 10:00 மணி வரை அதே இடத்தில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று, பின்னர் காலை 11:00 மணியளவில் 4570 Yonge Street (Yonge and Sheppard) இல் அமைந்துள்ள Forest Lawn Crematorium இல் தகனஞ்செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - 416-724-8364/416-918-4740
தயாபரன் - 905-542-3616/647-668-5372
அகிலா இராஜலிங்கம் - 905-915-5960/416-882-4458
காந்தீபன் - 416-724-2893/647-241-7004
பாஸ்கரன் - 416-284-0040/416-560-0395
சுதாகரன் - 416-284-5700/416-559-9266
சிவகாந்தன் - 416-471-0604

கண்ணீர் அஞ்சலி
 

Sep03,2012

திருமதி பகவதி இரத்தினம்
(ராசாக்கா, பகவதி ரீச்ச
ர் - ஓய்வு பெற்ற ஆசிரியர்)

 
பிறப்பு : 28 யூலை 1934   இறப்பு : 3 செப்ரெம்பர் 2012

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை வளமாரிகட்டுவனை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பகவதி இரத்தினம் அவர்கள் 03-09-2012 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையதம்பி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியா
ர்) அவர்களின் அன்பு மனைவியும், மாலினி(மாலா - லண்டன்), ராஜினி(ராசி - லண்டன்), பகீரதன்(அப்பன் - லண்டன்), சிவாஜினி(ராசாத்தி - லண்டன்), சுகந்தினி(குஞ்சு - லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், அன்னலட்சுமி, சிவபாக்கியம், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், சித்திரவடிவேல், கைலாசநாதன், காலஞ்சென்ற முருகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மதியழகன்(மதி), அருள்ராஜா(பாரி - லண்டன்), பிருந்தா(லண்டன்), சிவகோபிகிருஷ்ணா(கோபி - லண்டன்), விக்கினேஸ்வரன்(விக்கி - லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற மதியாபரணம், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, புவனேஸ்வரி, முத்தாபரணம், சிவபாத சுந்தரம், இராசமலர், காலஞ்சென்ற சபாரட்ணம், மாணிக்கவாசகர், ராஜேஸ்வரி, காலஞ்சென்ற மல்லிகாதேவி, கனகசுந்தரி, புஷ்பா, ரமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், மயூரன், மிதுஷன், இலக்கியா, ஆகாஷ், அஸ்வினி, கர்ணிகா, மிதுனன், லோஜிகா, மயூராம், ஹரிஷ்ராம், அஸ்வின், அபிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாலினி(மாலா) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447882175861
அருள்ராஜா(பாரி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447956313181
விக்கினேஸ்வரன்(விக்கி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447891671991
பகீரதன்(அப்பன் — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447525813148
சிவகோபிகிருஷ்ணா(கோபி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447752960766
சிவாஜினி(ராசாத்தி) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447938477662
சுகந்தினி(குஞ்சு) — பிரித்தானியா; செல்லிடப்பேசி: +447852157107

 

Sep01,2012

திரு செல்லத்துரை நடராஜா

(இளைப்பாறிய அதிபர்)

தோற்றம் : 13 ஓகஸ்ட் 1938   மறைவு : 1 செப்ரெம்பர் 2012

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை நடராஜா அவர்கள் 01-09-2012 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், யோகராஜா, காலஞ்சென்ற சௌந்தராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற கோமளாதேவி, சியாமளா(கனடா), ஜெயகரன்(கட்டார்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், இலங்கநேசன்(கனடா), Dr.கிருஷ்ணகோபி(கட்டார்) ஆகியோரின் அன்பு மாமனாரும், திவாகரன்(கொழும்பு), Dr.சிவாகரன்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற ஜோதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், அஜந்தன்(கனடா), அபிலாஷ்(கனடா), ஷைனுஜா(கட்டார்) ஆகியோரின் அன்புப் பேரனும், சிவசோதி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்வராசா, குமாரசாமி, பராசக்தி(பிரான்ஸ்), இராசமணி(பிரான்ஸ்), தவமணி(டென்மார்க்), கமலாம்பிகை(வவுனியா), செல்லத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 03-09-2012 காலை 09.30 மணி முதல் அஞ்சலிக்காக காலி வீதி கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு பின்னர் 04-09-2012 செவ்வாய்க்கிழமை மதியம் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மாலை 4.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
No.13A, 3/1, பிரட்ரிக்கா றோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு - 06.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
இலங்கை: தொலைபேசி: +94112556584
இராசமணி(மைத்துனி) — பிரான்ஸ்; தொலைபேசி: +33952345474

 

Aug 26,2012

திரு இளையதம்பி சித்திரவடிவேல்(தங்கராசா)

தோற்றம் : 3 யூலை 1955   மறைவு : 26 ஓகஸ்ட் 2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் பெரியகடையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி சித்திரவடிவேல் அவர்கள் 26.08.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி இராசம்மா தம்பதியரின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசுப்பிள்ளை சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும், கார்த்தீபன்(லக்சுமி ஸ்ரோஸ் மன்னார்), ராதிகா, விமலதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் துரைராசா(கனடா), இராசலட்சுமி, உதயராணி, பூமணி, சுந்தரலிங்கம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், சரோசினிதேவி, சிறிஸ்கந்தராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சோபிகா, வசீகரன், ஆகியோரின் மாமனாரும் தனுசனன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.08.2012 திங்கட்கிழமை அன்று பி.ப 5:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கார்த்தீபன் - மன்னார் — இலங்கை; செல்லிடப்பேசி: +94779476244
சுகிதரன் - பெறாமகன் — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41764613721

 

Aug 10, 2012

செல்வன் ராஜகோபாலன் நிக்கோலா
(ஆதித்யன்)

அன்னை மடியில் : 18 செப்ரெம்பர் 1989   இறைவன் அடியில் : 10 ஓகஸ்ட் 2012

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜகோபாலன் நிக்கோலா அவர்கள் 10-08-2012 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(வேலணை) திலகவதி தம்பதிகள், புங்குடுதீவு 10 ம் வட்டாரத்தைச் சேர்ந்த தில்லைநாதன் தனலட்சுமி(கனடா) தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும், ராஜகோபாலன்(பொந்துவாஸ் பாலன்) ரஞ்சிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், லுக் ஆதவன்(பிரான்ஸ்), நொயமி ஆரண்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.


அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:
2, Rue De La Javeleuse,
95490 Vaureal.


தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
லுக் ஆதவன்(சகோதரன்) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33689399823
பாலன்(தந்தை) — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33673903132
வீடு — பிரான்ஸ்; தொலைபேசி: +33134309376

 

July 20, 2012

திருமதி துரைராசா கமலாதேவி
(சின்னக்கிளி)

தோற்றம் : 8 சனவரி 1940   மறைவு : 20 யூலை 2012

வேலணை கிழக்கு அம்மன் கோவிலடி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் துர்க்கா கண்டோன் வயின்பில்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா கமலாதேவி அவர்கள் 20-07-2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி, தெய்வானை, தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும், ரவிக்குமார்(ரவி - சுவிஸ்), ரவிமோகன்(ஜேர்மனி), கயல்விழி(சுவிஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சந்திரசேகர்(இந்தியா), சந்திராதேவி(பிரான்ஸ்), ராஜேந்திரன்(கொழும்பு), மகாதேவன்(யாழ். சாவகச்சேரி), சறோஜாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், உஷாநந்தினி(சுவிஸ்), குமுதினி(ஜேர்மனி), திருக்கேதிஸ்வரன்(சுவிஸ்), பாமினி(பிரான்ஸ்), விஜயரூபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற குலசேகரம் செல்வதி(கொழும்பு), காலஞ்சென்ற செல்வநாயகம் தெய்வேந்திரம்(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அமுதவதி புனிதவதி(யாழ்ப்பாணம்), லோகாம்பிகை(இந்தியா), அருளையா(பிரான்ஸ்), சாரதாதேவி(கொழும்பு), காலஞ்சென்ற பரமேஸ்வரி உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், முரளிதாஸ்(கனடா), சங்ரன்(கனடா), துஞ்சா(ஜேர்மனி), டிசினி(ஜேர்மனி), கஜன்(இந்தியா), வாணி(கனடா), தினேஸ்(லண்டன்), ரஜனி(லண்டன்), வதனி(கொழும்பு), கௌசி, சரணியா, சுவே, டிசானா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அருட்செல்வி(பிரான்ஸ்), சத்தியசீலன்(சுவிஸ்), சுவிதா(பிரான்ஸ்), கவிதா(சுவிஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), சிந்துஜன், ஆருஜன், அஜந்தினி, பிரியந்தினி(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், கௌசிகன், கௌதமன், காவியா, துசிந்தன், கவிநாஸ், அஸ்மிரா, துவாரகா, பவித்திரன், சாருகா, விதுசா, சச்சின், சௌமியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
ஞாயிற்றுக்கிழமை
22/07/2012, 10:00 மு.ப — 06:00 பி.ப
திங்கட்கிழமை
23/07/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
செவ்வாய்க்கிழமை
24/07/2012, 02:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:
Friedhof Weinfelden, Freie Strasse, 22, 8570 Weinfelden

கிரியை:
புதன்கிழமை
25/07/2012, 09:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:
Friedhof Weinfelden, Freie Strasse, 22, 8570 Weinfelden

தகவல்
மக்கள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
ரவி(குமார் - மகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41716225247; +41763223427
மோகன் — ஜெர்மனி; தொலைபேசி: +4915123447397
சசி — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33751029185
கண்ணன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41763996781
ரூபன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41787657735
சந்திரசேகர்(தம்பி) — இந்தியா; தொலைபேசி: +914422743498
சந்திராதேவி — பிரான்ஸ்; செல்லிடப்பேசி: +33951140397
ராஜேந்திரம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94750971401
மகாதேவன் — இலங்கை; தொலைபேசி: +94217901396
சறோஜாதேவி — பிரான்ஸ்; தொலைபேசி: +33139886815

சுவீஸ் வாழ் மக்களின் கண்ணீர் அஞ்சலி

 

July 06, 2012

திரு தம்பு குலசேகரம்பிள்ளை

(இளைப்பாறிய வருமான வரி உத்தியோகத்தர் )

மலர்வு : Jan 23, 1927   உதிர்வு : July 06, 2012

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தம்பு குலசேகரம்பிள்ளை அவர்கள்  06-07-2012 இன்று பிரான்ஸில் காலமானர். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு-மாரிமுத்து தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்-தங்கம்ம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரி, நாகநாதி, சுந்தரம், சமாதிலிங்கம், எதிர்வீரசிஙம் ஆகியோரின் அன்பு சகோதரரும், கந்தையா, இராசம்மா, பொண்ணம்பலம், அழகேந்திரவதி, அன்னலட்சுமி, கனகரத்தினம், மற்றும் பாலசிங்கம், வீரசிங்கம், காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இரத்தினசிங்கம் மற்றும் சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஜெயஈஸ்வரி (திருமஞ்சம்), விக்கினராஜா, சிறீஸ்கந்தராஜா, விவேகானந்தராஜா (ஆனந்தன்), கிருஷ்ணராஜா (பவி), விபுலானந்தராஜா (ராசன்), ஜெகதா ஆகியோரின் அன்புத் தந்தையும், சிவசுந்தரம், புஷ்பராணி, குணாளினி, பகீரதி, ஜெயராதா, சுயா, சிறிதரன் (துரையன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஷர்மிளா, ரஜீவ், நிருஜா, நிஷாந், துஷிதா, தனுசா, வைகுந்தன், விதுஷன், ஜனனி, யாதவன், ஜனார்த்தன், விவேஷன், கபிலன், அபிரா, ஆர்த்திகன், ஆகிசன், அட்சயா, அபிஷன், அபிநயா, அனோஜன், ஆரணி, அம்சிகா, ஆரூயா, கிஷோர், சுதாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும், அஷனாவின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 12-07.2012 (வியாழக்கிழமை) நேரம் 9:00 AM இல் இருந்து 12:00 PM வரை அவரது இல்லத்தில் (முகவரி: 46rue de l'Essonne, 91000 EVRY) பார்வைக்காக வைக்கப்பட்டு கிரிகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்று தொடர்ந்து பின்னர் 1:00 PM மணியிலிருந்து 2:00 PM மணி வரை CREMATORIUM R. MARIN, rue Louis Bourdet, 91080 Courcouronnes என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

 

May 26, 2012

திருமதி இராசலட்சுமி கைலாயபிள்ளை
(இளைப்பாறிய ஆசிரியை)

தோற்றம் : 4 நவம்பர் 1931   மறைவு : 26 மே 2012


வேலணை கிழக்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசலட்சுமி கைலாயபிள்ளை அவர்கள் 26-05-2012 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பாபிள்ளை நாகம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற சதாசிவம் மாரிமுத்து தம்பதிகளின் மருமகளும், கைலாயபிள்ளை(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயதேவி(வவுனியா), சத்தியதேவி(வவுனியா), நிர்மலாதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறீதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற அன்னலட்சுமி, சொர்ணலட்சுமி, செல்வலட்சுமி(லீலா), சண்முகவடிவு(மணி) ஆகியோரின் அருமைச் சகோதரியும், காலஞ்சென்ற சண்முகம், மாணிக்கவாசகர், மூத்ததம்பி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும், ஜெகநாதன், குமாரதாஸ் ஆகியோரின் அன்பு மாமியும், பிருந்தாவன், கோகுல், நிவேத் ஆகியோரின் அருமை பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

 

May 20, 2012

திரு காத்திகேசு செல்வநாயகம்

பிறப்பு-10.02.1942   இறப்பு-20.05.2012

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காத்திகேசு செல்வநாயகம் அவர்கள் 20-05-2012 அன்று வேலணையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற காத்திகேசு - தங்கம்மா தம்பதிகளின் புதல்வரும்,  துரைராசா, குலசேகரம், தெய்வேந்திரம், செல்வதி, அமுதகௌரி, புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  கமலாதேவி(சின்னகிளி), சாருதாதேவி  ஆகியோரின் அன்பு மைத்துனரும்  ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று வேலணை சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அறிவிப்பு (தகவல்):

துரைராசா கமலாதேவி
வேலனை கிழக்கு 3ம் வட்டாரம்
0041435353253
0094770201715

 

May 19, 2012

திருமதி நாகம்மா மாணிக்கம

(இளைப்பாறிய ஆசிரியை)

மலர்வு : 17 மார்ச் 1918   உதிர்வு : 19 மே 2012

அளெவெட்டி வடக்கு உந்துடையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியை திருமதி நாகம்மா மாணிக்கம் அவர்கள் 19.05.2012 அன்று சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து மருமகளும், காலம்சென்ற வேலணையூர் பண்டிதர் மாணிக்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், சுப்பிரமணியம், கந்தையா, சின்னம்மா, இளையபிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விஸ்வலிங்கம், செல்லப்பா, சரவணமுத்து, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், காந்திதாசன்(USA), சத்தியமூத்தி(UK), சந்திரகாந்தன்(India), காந்திமதி(Canada), இந்துமதி(Canada), இந்துசேகரன்(UK),  பானுமதி(Canada) ஆகியோரின் அன்பு தாயாரும், ஜெயச்சந்திரன்(Canada), சத்தியஷ்மி(USA), சசிகலா(UK), இந்திராதேவி(India), சிறிகரன்(ரகு)(Canada), சுகந்தி(UK), விக்கினேஸ்வரன்(Canada) ஆகியோர்களின் அன்பு மாமியாரும், சபேசன், ஆனந்தி, தினேசன், கெளதமி, ஜெனனி, அபிராமி, அசோக், ஆனந், லவன், மதுரா, பிருந்தா, கிருஸ்ணா, திலக், அருண், ஆரபி ஆகியோரின் அன்பு பேத்தியும், அஷ்வின், அக்ஷ்யா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-05.2012 (புதன்கிழமை) நேரம் 5:00 PM இல் இருந்து 9:00 PM வரை Chapal Ridge Furneral Home பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் 24.05.2012 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 9:00 AM மணியிலிருந்து 11:00 AM மணிவரை கிரிகைகள், பிரார்த்தனைகள் நடைபெற்று தொடர்ந்து 11:00 AM மணிக்கு Mount Pleasant Cemetery ல் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Hall:

Chapal Ridge Furneral Home

8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1

Viewing Time: Wednesday (May 23, 2012)  5:00 PM - 9:00 PM

 

Cemetery & Cremation Place:

Mount Pleasant Cemetery

375 Mount Pleasant Road, Toronto

Cremation Time : Thursday (May 24, 2012)

தொடர்புகளுக்கு:

விக்கினேஸ்வரன் : 1-905-554-4021 / 1-647-283-1193
காந்திதாசன் : 1-617-913-1047
சத்தியமூத்தி : 011-44-208-4074078
சந்திரகாந்தன் : 011-91-44-98408283
ஜெயச்சந்திரன் : 1-647-865-2644
சிறிகரன்
(ரகு) : 1-647-702-7545
இந்துமதி : 1-647-340-7325 / 647-588-5545
இந்துசேகரன் : 011-44-207-5114507

 

Apr 17, 2012

திருமதி செல்வராணி பிறேம்குமார்

மண்ணில் :   விண்ணில் : 2012-04-17

வேலணையைப் பிறப்பிடமாகவும், கொட்டடியினை வசிப்பிடமாகவும் தற்போது சுவிற்ஸர்லாந்தில் வாழ்ந்த வருமாகிய செல்வராணி பிறேமகுமார் கடந்த 17.04.2012 செவ்வாய்க் கிழமையன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை கண்மணி தம்பதியரின் அன்புமகளும், கொக்குவில் மேற்கைச்சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராஜநாயகி தம்பதியரின் பாசமிகு மருமகளும், பிறேமகுமார் அவர்களின் அன்பு மனைவியும், பிரதீப், பிரமிளன், பிரகாந் ஆகியோரின் பாசமிகு தாயும், பாலச்சந்திரன், நீலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஷ்மி, புஸ்பராணி, உதயராணி ஆகியோரின் அன்புச்சகோதரியும், தனேந்திரன், காலஞ்சென்ற அம்பிகைராசா மற்றும் யோகநாதன், இராஜேஸ்வரன் காலஞ்சென்ற சாந்தகுமார் மற்றும் கலாதேவி, வசந்தகுமார் (கனடா), ஜீவகுமார் (கனடா), ஜெயகலா (சுவிஸ்), பத்மலதா (கனடா) ஆகியோரின் மைத்துனியும் சற்குணதேவி (கனடா), ஜதினி (கனடா), விஜயகுமார் (சுவிஸ்), குலேந்திரன் (கனடா) ஆகியோரின் உடன் பிறவா சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (2012.04.20) வெள்ளிக்கிழமை CHAPELLE-DU-CENTER-SUNERAIRE-D’YBERPON, RUE.DU,NID, 45-1400 YEROONSWIT நடைபெற்று சுவிற்ஸர்சலாந்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 

Apr 03, 2012

திரு முத்தர் இராசையா

மண்ணில் : 1933   விண்ணில் : 3 ஏப்ரல் 2012

புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், இல-271/c4, மன்னார் வீதி, பட்டணிச்சூர், வவுனியாவை தற்காலிக வதிவிடமாக கொண்ட முத்தர் இராசையா அவர்கள் 03-04-2012 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தர், செல்லாச்சி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும் சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், இராசகுலம்(இலங்கை), இராசேந்திரன்(ஜேர்மனி), இராஜேஸ்வரி்(கலா - முன்சன், ஜேர்மனி), ஞானேஸ்வரி்(இலங்கை), ஜெயந்திமாலா(பிரான்ஸ்), கல்யாணி(இலங்கை), இராஜராஜன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற அகல்யா மற்றும் யோகநாதன்(முருகன் - ஜேர்மனி), சிவகுமாரன்(டோகா) , சுரேந்திரராஜா(பிரான்ஸ்), தயாபரன்(இலங்கை), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 04-04-2012 புதன்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, தட்சனங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சி. ஞானேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94244588577
செல்லிடப்பேசி: +94774430652
யோ. இராஜேஸ்வரி — ஜெர்மனி
தொலைபேசி: +4925015943668
இ. இராஜேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4925197434566

 

Mar 14, 2012

திருமதி பரமேஸ்வரி மகாதேவன்

தோற்றம்:   மறைவு : 2012-03-14

வாழ்ந்த இடம்: சாவகச்சேரி

கைதடி, நுணாவில், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி மகாதேவன் நேற்று (14.03.2012) புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சிதம்பரம் தம்பதியரின் இளைய மகளும் மகாதேவனின்  (வேலணை) பாசமிகு மனைவியும் கௌசி, சரண்யா, டிஷானா, சுபேதினி ஆகியோரின் அன்புத் தாயும் மயூரனின் அன்பு மாமியும் கனகமணி, சிவபாக்கியம், காலஞ்சென்ற வைரமுத்து மற்றும் இரத்தினமலர், மலர்மணி, புவனேஸ்வரி, தங்கேஸ்வரன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் கமலாதேவி (Swiss), சந்திரசேகரம் (France), சந்திராதேவி (France), இராசேந்திரம் (Colombo), சறோஜாதேவி (France) ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (14.03.2012) புதன்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 4 மணிக்கு குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

தொடர்புகளுக்கு
ப.மகாதேவன் (கணவர்) - கைதடி நுணாவில்,


தகவல் : Kamalathevy(Sinnakili ) Swiss- 0041435353253; Sarojathevy (vasanthy) Paris-0033139886815


 

Nov 14, 2011

திரு நாகலிங்கம் நடராசா

(முன்னாள் முகாமையாளர் - TMB Enterprises)

மலர்வு : 27 நவம்பர் 1939   உதிர்வு : 14 நவம்பர் 2011

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் நடராசா அவர்கள் 14-11-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், பவானி, பகீரதன்(சுவிஸ்), பரணீதரன்(Finance & Admin Mgr), பரமஜெயன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற யோகவதி சிவகுரு(கனடா), செல்வரட்ணம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற தர்மராசா(மன்னார்), டசிகா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவசோதி, மனோன்மணி, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், தர்மிகா, மதுராஜினி, சகீவன், கீர்த்தனா, ஆரணி, நிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-11-2011 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று சாட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் ந.பரமஜெயன்(மகன்)
தொடர்புகளுக்கு
ந. பகீரதன்(மகன்) — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +4126535885

 

Nov 11, 2011

திருமதி செல்லத்துரை இராசலட்சுமி (இராசாக்கா)

மலர்வு : 02.01.1936    உதிர்வு : 11.11.2011

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திருமதி செல்லத்துரை இராசலட்சுமி அவர்கள்  11-11-2011 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானர்.

அன்னார் காலம் சென்'றவர்களான திரு திருமதி கந்தையா நகுலேஸ்வரி அவர்களின் அன்பு மகளும், திரு திருமதி சண்முகம் முத்துபிள்ளை ஆகியோரின் மருமகளும், காலஞ்சென்ற திரு செல்லத்துரை அவர்களின் அன்புமனைவியும், கனகறஞனி (இலங்கை), கனகரகனகறஞ்சன் (பிரான்ஸ்), றதிகரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புதாயாரும், திரு ஜெகநாதன்(ஆசிரிய ஆலோசகர் யாழ்), திருமதி பரிமளா (பிரான்ஸ்), திருமதி கிருஷ்ணவேணி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும், காலம் சென்றவர்களான அன்னலட்சுமி, பூமணி, மற்றும் மனோன்மணி (இலங்கை), கமலாம்பிகை (பிரான்ஸ்) சோமசுந்தரம் (இலங்கை), விமலாதேவி (இலங்கை), காலஞ்சென்ற தியாகராசா ஆகியோரின் சகோதிரியும், காலம் சென்றவர்களான திரு பொன்னையா, இராசலிங்கம், செல்வராசா, கிருஷ்ணபிள்ளை, மற்றும் விமலாதேவி(இலங்கை), காலம் சென்றவர்களான அன்னலட்சுமி, நவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும், பிரசன்னா, வித்தியா, வியாசன், கௌசிகன், காவியா, காவியன், சாருஜா, சாருஜன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-15.11.2011 (திங்கள், செவ்வாய்) நேரம் 10:30 AM இல் இருந்து 11:30 AM வரையும் பின்னர் 4:00 PM இல் இருந்து 5:00 PM வரை 10, RUE DES POMMIERS 93500 PANTIN
முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு 16.11.2011 புதன்கிழமை அன்று முற்பகல் 8:00 AM மணியிலிருந்து 9:00 AM மணிவரை கிரிகைகள், பிரார்த்தனைகள் நடபெற்று தொடர்ந்து 10:00 AM மணிக்கு CREMATDRIUM DU PERE LACHAISE AV. DU CIMETIERE 75020 PARIS என்ற முகவரியில் ஈமக்கிரிகைகள் நடைபெறும்.
 

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
றஞ்சன் - 06 65 50 84 23 (பிரான்ஸ்)
சசி - 01 41 71 40 98, 06 63 32 83 76 (பிரான்ஸ்)
தகவல்:
ஜெகநாதன் - 0094 777110613 (இலங்கை)

 

Oct 01, 2011

திரு செல்லையா திருநாவுக்கரசு
(திருஅங்கில், முன்னைநாள் காவல்துறை அதிகாரி)

மலர்வு : 23 மே 1935    உதிர்வு : 1 ஒக்ரோபர் 2011

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், ஜேர்மன், பெர்லினை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் 01-10-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா மற்றும் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு மற்றும் ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயவதனி, விஜயவதனி, கோமலாவதி, சிவகுமார், ரவீந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற முருகதாஸ், ஜெயசேகரன், யோர்க், பாமிலா, ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சிங்கராசா, காலஞ்சென்ற மங்கையற்கரசி, பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கோபாலபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், மீனாட்சி, காலஞ்சென்ற சண்முகநாதன், பாலசிங்கம், மகாலெட்சுமி ஆகியோரின் மைத்துனரும், ஜெயசேகரன், கமலவாணி, ஜானசேகரன், ரஞ்சிதமலர், வணிதமலர், சுசில், சிவகரன் ஆகியோரின்
அன்பு மாமாவும், ஜெயந்தி, ஜெயசுதா, ஜெயக்குமார், ஜெயசங்கர் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், ஜெயராசா, ஜீவராசா, அருள்ராசா, சுபாராசா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், பிர்சிலா, கோடிலியா, கிருபாஸ், விஜய், விதுசா, கமிலா, ரபினா, ரித்திகா, ரொஷான், ஆகாஷ், அபினாஷ் ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.

கிரிகை
திகதி: வியாழக்கிழமை 06/10/2011, 08:30 மு.ப
முகவரி: Friedhof und Krematorium, Ruhleben Am Hain1, 13597 Berlin  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெர்மனி
தொலைபேசி: +4917621751446
செல்லிடப்பேசி: +493061201870

 

Aug 14, 2011

திருமதி வர்ணகுலசிங்கம் தேவகி

வேலணை கிழக்கு, 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த திருமதி வர்ணகுலசிங்கம் தேவகி நேற்று (14.08.2011) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சபாபதி இராசலெட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், வர்ணகுலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சண்முகரத்தினம் பத்மாசினி தம்பதியரின் மருமகளும், கிரிதரன்(சமுர்த்தி உத்தியோகத்தர், புங்குடுதீவு), சிறிதரன், சிவதரன், வனதா, விஜிதரன், விஜிதர்சினி(யாழ். பல்கலைக்கழகம்), சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயும், சுதாகுமார், ராதிகாவின் அன்பு மாமியும், விதுரன், கவிநயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (15.08.2011) திங்கட்கிழமை பி.ப 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: ச.வர்ணகுலசிங்கம்(கணவர்), கிரி(மகன்)
தொடர்புகளுக்கு:
ச.வர்ணகுலசிங்கம்(கணவர்), கிரி(மகன்) - வேலணை கிழக்கு, வேலணை-2

 

July 25, 2011

திருமதி பூவலிங்கம் யோகராணி

உடுவில் தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், 56, Rue Myrha, Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி பூவலிங்கம் யோகராணி அவர்கள் 25.01.2011 திங்கட்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் இராசையா, காலஞ்சென்ற நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மகளும், வேலணையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியலெட்சுமி அவர்களின் அன்பு மருமகளும், பூவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கஜனன், கஜனியின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்ற இராமநாதன், புஷ்பராணி, செல்வராணி, சோதிமலர், விஜியகலா, சசிகுமார் ஆகியோரின் சகோதிரியும், காலஞ்சென்ற சிவபாதலிங்கம், புஷ்பராசா, சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி, பஸ்மராணி, புஸ்பராணி, சரோஜினி, யோகராணி, சூரியபிராபா, சிவகுமார், இராசகுமார், வற்சலா ஆகியோரின் மைத்துனியும், மஞ்சுளா, இந்திராணி, புஸ்பராணி, காலஞ்சென்ற இராசகுமார், மற்றும் இராசரத்தினம், மோகன், சிங்கராசா, அருள்லிங்கம் ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28.07.2011 வியாழக்கிழமை காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை Funerarium, 7, Bd Menilmontant, 75020 Paris என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 01.08.2011 திங்கள் காலை 10:30 முதல் 11:00 மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்றபின் GAMBETTA மயானத்தில் 11:30 மணிக்கு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
கணவர் (பூவலிங்கம்)

தொடர்புகளுக்கு:
கணவர் (பூவலிங்கம்) : 01.42.64.41.67 ; 06.62.98.76.35
விஜி : 09.52.00.47.86
சசிகுமார் (சகோதரன்) : 06.01.34.20.08
சோதிமலர் (சகோதரி) : 0094 77 96 72 768 (இலங்கை)
வசி (பெறாமகன்) : 07.61.23.69.18

 

June 09, 2011

திருமதி சதாசிவம் மனோன்மணி (பறுவதம்)

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் மனோன்மணி அவர்கள் 09.06.2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விசுவலிங்கம், செல்லப்பா, சரவணமுத்து, பண்டிதர் மாணிக்கம் ஆகியோரின் சகோதரியும், கனகலிங்கம் (இளைப்பாறிய கிராம சேவையாளர்), புவனேந்திரன் (இளைப்பாறிய தபால் அதிபர்), மகேஷ்வரன்(இளைப்பாறிய முகாமையாளர், கனடா), சண்முகலிங்கம்(வேலணை), கணேசலிங்கம்(இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சரோஜினிதேவி, உஷாதேவி, சிவமதி(கனடா), சரஷ்வதி, மதிவதனி(இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும், ராஜினி செல்வராஜா(டென்மார்க்), ரமேஷ்(இலண்டன்), கவிக்கா(இலண்டன்), ஜெயந்தினி யசோதரன்(இலண்டன்), Dr. தீபனா, சஞ்சயன்(Dietician), நிரூபனா(மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழகம்), ஜனகா(வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்), சோபனா(கனடா), லக்ஷனா(கனடா), கோபிநாத்(கனடா), அர்ச்சனா(கனடா), ரம்யா(பல்கலைக்கழகம், இலண்டன்), சர்மியா(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அட்ஷயா, கௌதமன், கிரன்(டென்மார்க்), சாம், ஒலிவர், ஆருஷா(இலண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.06.2011 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் நடைபெற்று, பின்னர் 3:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
கனகலிங்கம் — இலங்கை; செல்லிடப்பேசி: +94774312560
சண்முகலிங்கம் — இலங்கை; தொலைபேசி: +94213214419; செல்லிடப்பேசி: +94750425923
கணேசலிங்கம் — பிரித்தானியா; தொலைபேசி: +442084718607
புவனேந்திரன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94777289751
மகேஷ்வரன் — கனடா; தொலைபேசி: +14165192316

 

May 31, 2011


தம்பிப்பிள்ளை ஐயாத்துரை (நாகராசா)

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் மன்னாரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 31-05-2011 செவ்வாய்க்கிழமை மன்னாரில் காலமானார்.

அன்னாரின் இறுதிச்சடங்குகள் 01.06.2011 புதன்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Apr 25, 2011

திரு ஐயாத்துரை தர்மராஜா (தருமன்)

வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட ஐயாதுரை தர்மராஜா அவர்கள் 25.04.2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயாதுரை இராசலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், கொழும்பை வதிவிடமாக கொண்ட நடராஜா சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும், நந்தினி அவர்களின் அருமைக் கணவரும், தர்மிகா, மதுரா, சயீவன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும், சிறிதரன்(தவம், ஆதவன் ஸ்ரோஸ் உரிமையாளர்- மன்னார்), கலாதேவி(மானிப்பாய்), யோகராணி(சாந்தி - மன்னார்), விமலாதேவி(வசந்தி- சுவிஸ்), வரதராஜா(வரதன் - சுவிஸ்), ஆனந்தராஜா(ஆனந்தன் - மன்னார்) ஆகியோரின் சகோதரரும், பகீரதன்(ராதன் - சுவிஸ்), பரணிதரன் (பவான், சட்டத்தரனி - கொழும்பு), பரமஜெயன் (ஜெயன் - கொழும்பு) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 27.04.2011 புதன்கிழமை அன்று மன்னாரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மன்னார் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
வரதராஜா(வரதன் - சுவிஸ்), பகீரதன்(ராதன் - சுவிஸ்)
தொடர்புகளுக்கு
பவான் — இலங்கை; தொலைபேசி: +94232222184; செல்லிடப்பேசி: +94773015301
வரதன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41319323512
ராதன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41265355885
வசந்தி — சுவிட்சர்லாந்து; செல்லிடப்பேசி: +41765440963

 

Apr 23, 2011

திரு கனகசபை சொர்ணலிங்கம்

(பிரபல வர்த்தகர் புகையிலை வியாபாரி - கொழும்பு)

பிறப்பு : 5 ஒக்ரோபர் 1947   இறப்பு : 23 ஏப்ரல் 2011  

வேலணை 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை சொர்ணலிங்கம் அவர்கள் 23-04-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசபை மற்றும் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும், சோபனா(ஜோ்மனி), சத்தியரூபன்(முகுந்தன் - லண்டன்), மகிபன்(இலங்கை), சுதர்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், சசிகுமார்(ஜோ்மனி), புஸ்பலோஜினி(லண்டன்), மனோஜா(இலங்கை), சிறிதரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் மல்லிகாதேவி(சுவிஸ்), யோகேஸ்வரன்(ஈசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்றவர்களான மதியாபரனம், குலசிங்கம் மற்றும் தவநிதி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், மகாலிங்கம், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும், மயூரன், குணாசி, ஜெயந்தி, சிறி, கேதீஸ், சிவா, பிரகாஸ், ரதிஸ், மீரா காலஞ்சென்ற சுபாஸ், வாசன் ஆகியோரின் அன்பு மாமாவும், சோபிகா, கஜன்(பிரான்ஸ்), தர்சன், துவாரகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், சசி, குமார், நாதன், கலா, கீதா, சசிந்தரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், கவுசிகா(ஜோ்மனி), அக்ஷயன்(லண்டன்), அஷ்விகா(இலங்கை), அபிஷ்ஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-04-2011 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வேலணை சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை; தொலைபேசி: +94214914752
சோபனா — ஜெர்மனி; தொலைபேசி: +498382280425
ரூபன் — பிரித்தானியா; தொலைபேசி: +442084770161
மகிபன் — இலங்கை; செல்லிடப்பேசி: +94775440536
சுதா — பிரான்ஸ்; தொலைபேசி: +33130303794

 

Mar 26, 2011

திரு கிரிதரன் (ராதா) கனகரத்தினம்

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திரு கிரிதரன் (ராதா) கனகரத்தினம் அவர்கள் 26-03-2011 சனிக்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் திரு கனகரத்தினம்(ஆசிரியர்) காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புமகனும், கவிதா அவர்களின் அன்புக் கணவரும், கஷ்தூரியின் அன்புத் தந்தையும், பாஸ்கரன் (ரவி),
சிறிகரன் (ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Viewing Hours:
Wednesday, March 30th, 2011; 5:00 PM to 9:00 PM
Rosar-Morrison Funeral Home & Chapel
467 Sherbourne Street (Wellesley/Sherbourne)

Cremation:
Thursday, March 31st, 2011; 12:00 PM to 2:30 PM
635 Parliament Street (St. Jamestown) (Parliament/Wellesley)

தகவல்
குடும்பத்தினர்: T.P : 416-926-1754; Cell : 647-861-9087

 

Mar 07, 2011

திரு சண்முகம் ஆறுமுகம்

தோற்றம் : யூன் 28, 1929   மறைவு : மார்ச் 07, 2011

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் ஆறுமுகம் அவர்கள் 07-03-2011 திங்கட்கிழமை அன்று  இறைவனடி சோ்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகம் சிவகாமி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தைய்யா பாக்கியம் தம்பதியினரின்  அருமை மருமகனும், காலஞ்சென்ற செல்வதி அவர்களின் அன்புக் கணவரும், இரத்தினாம்பிகை, வனிதாம்பிகை, காலஞ்சென்ற சிவமணி, சறோசா, கலா, குமுதா, செல்வநாயகம், நாகரட்ணம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரத்தினம், சித்திரவடிவேல், சிவராசா, விஜயரட்ணம், சிவநேசன், குமுதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்

 

Feb 08, 2011

திரு கனகரத்தினம் புஸ்பராசா

தோற்றம்: 28 நவம்பர் 1954   மறைவு : 8 பெப்ரவரி 2011

வேலனை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 62 2ம் ஒழுங்கை பட்டானிச்சூர், வவுனியாவை வசிப்பிமாகவும் கொண்ட கனகரத்தினம் புஸ்பராசா அவர்கள் 08-02-2011 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் பாக்கியலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும், இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும், வசிகரன், சசிகரன், விசிகரன், ரிஷிகரன், கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்னலெட்சுமி, பூபதி, யோகேஸ்வரி, தவமணி ஆகியோரின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சிவபாதலிங்கம், சந்திரபாலன் மற்றும் கேதீஸ்வரி, பூவலிங்கம், பஸ்மாராணி, புஸ்பராணி, சறோஜினி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சிவஞானம்பிகை மற்றும் சிவசுந்தரம், யோகராசா, காலஞ்சென்ற சிவராசா மற்றும் சண்முகரத்தினம், பாஸ்கரன், யோகராணி, மஞ்சுளா, புஸ்பராணி, காலஞ்சென்ற ராஜ்குமார் மற்றும் யோகராணி, இராசரத்தினம், மோகன், சிங்கராசா, அருளிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சித்திரவடிவேல், திருமஞ்சம், தவமலர், மங்கையர்கரசி, சுகந்தி, உதயன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10-02-2011 வியாழக்கிழமை அன்று வவுனியாவிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, வவுனியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனவைரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இந்திராணி(மனைவி) — இலங்கை; தொலைபேசி: +94244900307
வசிகரன்(மகன்) —பிரான்ஸ்;தொலைபேசி:+33142595625; செல்லிடப்பேசி: +33615705388
விசிகரன்(மகன்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33683024398
பூவலிங்கம்(சகோதரர்) — பிரான்ஸ்; தொலைபேசி: +33142644167

 

Jan 22, 2011

திரு செல்வரத்தினம் சுதாகரன்

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 65/6 வாசல வீதி, கொட்டாஞ்சேணை, கொழும்பு வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வரத்தினம் சுதாகரன் அவர்கள் 22.01.2011 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வரெத்தினம் மற்றும் முத்துலெட்சுமி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும், மதனிகா அவர்களின் அன்பு கணவரும், சுதாந்தினி, சுதாகுமார், சுதர்ஷன், சுயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், புஷ்பராஜா(நோர்வே), இரஞ்சிதமலர்(கொழும்பு), ஐங்கரன்(ஜொ்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், காலஞ்சென்ற தவராசா மற்றும் டொரின் ஆகியோரின் அன்பு சகலனும், பாரதிப்பிரியன், பிரதீபன், பிரசாந், நிவேதன், பமிளா ஆகியோரின் மாமனாரும், கோபிநாத்(அவுஸ்திரேலியா), சோதிகா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிறுக்கிழமை 23-01-2011 அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாலை 6.00 மணியாளவில் வேலணைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 24-01-2011 திங்கட்கிழமை பி.ப 2.00 மணியளவில் கிரிகைகள் நடைபெற்று பி.ப 4.00 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

Jan 07, 2011

திருமதி ரஜித்தா (அகழ்யா) இராசேந்திரன்

 
தோற்றம்: Aug 16, 1969     மறைவு: Jan 07, 2011

கொழும்பை பிறப்பிடமாகவும், ஹல்துமுல்லையை வசிப்பிடமாகவும், ஜோ்மனியில் வாழ்ந்துவந்தவருமான இராசேந்திரம் ரஜித்தா அவர்கள் 07-01-2011 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சிவராஜசிங்கம் குணரத்தினதேவி தம்பதியினரின் அன்பு மகளும், இராசையா சரஸ்வதி (வேலணை கிழக்கு) தம்பதியினரின் அருமை மருமகளும், இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,நிரோஷன், கீர்த்திகா, அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஞ்சன், ரமேஷ்(நோர்வே), ரஜினி(லண்டன்), ராஜன், ரஜீவ்(இலங்கை), சுரேஷ், பிரபா(லண்டன்), ஷாமிலா, கஜன், ஜாமினி(கல்முனை), அகிலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், ராஜன்(இலங்கை), ரஜீவ்(இலங்கை), வித்தியா, சத்யா, வனஜா, மயூரா(அவுஸ்திரேலியா), தர்ஷிகா, ஷர்மிக்கா(லண்டன்), தனுஜா, தயாபரன்(ஜோ்மன்), நொயல், தனுஷ், காலஞ்சென்ற தயாபரன், கோபிகா, கிருஷாந்தினி, இராச ஆகியோரின் அன்பு மைத்துனியும், குலசிங்கம், சாந்தி, வவி(இலங்கை), கலா(ஜோ்மன்), ஜெயா, கண்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

Jan 03, 2011

திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை

தோற்றம்: May 14, 1951   மறைவு: Jan 03, 2011

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி லோகேஸ்வரி (தேவி) ஐயாத்துரை அவர்கள் 03.01.2011 திங்கட்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், நடராஜா இளையபிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், வல்லிபுரம் இளையபிள்ளை தம்பதியினரின் மருமகளும், ஐயாத்துரை (முன்னாள் தலைவர் - முத்துமாரியம்மன் ஆலய அறங்காவல் சபை - வேலணை கிழக்கு) அவர்களின் அன்பு மனைவியும், மதியழகன்(கொழும்பு), கேமமாலினி(ஜோ்மன்), காலஞ்சென்ற மஞ்சுளா(வேலணை), ராகவன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும், சற்குணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், சாந்தகுமார், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியும், பூமலர், காலஞ்சென்ற சொர்ணம்மா, காலஞ்சென்ற ராசம்மா, காலஞ்சென்ற சோமசுந்தரம், சண்முகராஜா, காலஞ்சென்ற சிவராஜலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன், காவியா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-01-2011 வியாழக்கிழமை அன்று கொழும்பு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் பி.ப 2.00 மணிமுதல் 4.00 மணிவரை உறவுகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கிறோம்.

தகவல்
கணவர், மக்கள், மருமக்கள்.

தொடர்புகளுக்கு
மதி — 227, மகா வித்தியாலய மாவத்தை,  கொழும்பு -13, இலங்கை
தொலைபேசி: +94112338223; செல்லிடப்பேசி: +94777166266
யோகன் — நெதர்லாந்து;  தொலைபேசி: +31570625085
ஸ்ரீகரண் — பிரான்ஸ்;  தொலைபேசி: +33149451676

 

Dec 24 2010

திருமதி செல்வதி ஆறுமுகம்

தோற்றம்: June 15, 1934    மறைவு: Dec 24, 2010

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி செல்வதி ஆறுமுகம் அவர்கள் 24-12-2010 வெள்ளிக்கிழமை அன்று வேலணையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகம் சிவகாமி அவர்களின் அன்பு மருமகளும், ஆறுமுகம் அவர்களின் பாசமிகு மனைவியும், இரத்தினாம்பிகை(பாரிஸ்), வனிதா(பாரிஸ்), காலஞ்சென்ற தேவி, சிவமணி, செல்வநாயகம்(சுவிஸ்), சறோ(கொலன்ட்), குமுதா(லண்டன்), கலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வரத்தினம், சித்திரவடிவேல், சிவராசா, விஜயரத்தினம், சிவநேசன், குமுதினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Nov 29 2010

திருமதி பரமேஸ்வரி இராசலிங்கம்

பிறப்பு : Mar 07, 1950   இறப்பு : Nov 29, 2010

புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் சிவன்விதி 10/213 திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 29-11-2010 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சபாபதிப்பிள்ளை நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், சசிகலா(சுவிஸ்), சந்திரகலா(கனடா), இலங்கையில் வசிக்கும் மதுறஜனி, செந்தூரன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும், சறோசினிதேவி(நெதர்லாந்து), செல்வரத்தினம், மனோரஞ்சிதம், இராசரத்தினம், தாமிரவருணி, மங்களம்(இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரியும், காலஞ்சென்ற முத்துலிங்கம், சண்முகலிங்கம் புவனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நாகேஸ்வரன்(சுவிஸ்), சுரேஸ்குமார்(கனடா), இரத்தினகோபால்(சவூதி), ஜெசி(இலங்கை), காலஞ்சென்ற தாரணி  ஆகியோரின் அன்பு மாமியும், அஜந்தன், ஜெயந்தன், சியானி(சுவிஸ்), லிதுசன்(கனடா), கிஷானி, சிவானி(இலங்கை), சியாந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-11-2010 செவ்வாய்கிழமை அன்று கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

தகவல்:
மருமகன், மகள்
தொடர்புகளுக்கு
செந்தூரன் — இலங்கை; தொலைபேசி: +942114590287
மருமகன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +410442520744;                            செல்லிடப்பேசி: +417928827411

 

Nov 05 2010

திரு மருதப்பு மகாலிங்கம்

மலர்வு:செப்ரெம்பர் 24, 1930    உதிர்வு: நவம்பர் 05, 2010

வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மருதப்பு மகாலிங்கம் அவர்கள் 05.11.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், புஸ்பராஜா, ரஞ்சிதமலர், ஐங்கரன், மதனிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தவராஜா மற்றும் சசிகலா, டொரின், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி மற்றும் பூபாதி யோகேஸ்வரி ஆகியோரின் சகலனும், பிரியன், பிரதீபன், பிரசாத், கோபிநாத், கோபிகா, நிவேதன்,பமிலா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 08.11.2010 திங்கட்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Sep 09 2010

திருமதி யோகவதி சிவகுரு

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான திருமதி யோகவதி சிவகுரு அவர்கள் 09-09-2010 வியாழக்கிழமை கனடாவில் காலமானார்.

அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி நாகலிஙம் தம்பதிகளின் அருமை புதல்வியும், காலம் சென்றவர்களான திரு திருமதி செல்லையா தம்பதிகளின் மருமகளும், காலம் சென்ற திரு சிவகுருவின் துணைவியாரும், நடராஜா(கொழும்பு), செல்வரத்தினம்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு சகோத்ரியும், நேசரத்தினம்(கனடா), நேசராணி(கொழும்பு), யோகரட்ணம்(கனடா), யோகராணி(கொழும்பு), சிவகுமார்(கனடா), சிவமாலினி(கனடா),  மைதிலி(கனடா), ஆகியோரின் அருமைத்தாயாரும் நாகதேவி, சிவராஜா, நளாயினி, நேசராஜா, உருத்திரகாந்தன், சுனித்தா, அன்ருபாலா மாமியாரும் வினோத், ரீனா, ரயன், நிசாந், ரம்மியா, அபர்னா, அஸ்வின், சுஜீவன், சிந்துஜன், மதுசன், சமிட்டா, சேரன், ரிசாந், சகானா, அசாந், ஜாசக், ஏஞ்சலினா பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னார் பூதவுடல் OGDEN FUNERAL HOMES இல் ஞாயிறு/திங்கள் ஆகிய இரு தினங்களும்(மாலை 5:00 PM - 9:00 PM ) பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் செய்வாய் காலை 10:30AM - 12:00PM மணிக்கு நல்லடக்க ஆராதனை நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Viewing Hall:

4164 Sheppard Avenue East  (Midland Ave/ Sheppard Ave E)

Click here ->  Ogden Funeral Homes

Viewing Time: Sunday (Sep 12, 2010)  5:00 PM - 9:00 PM

                            Monday (Sep 13, 2010)  5:00 PM - 9:00 PM

 

Cemetery & Cremation Place:

Mount Pleasant Cemetery

375 Mount Pleasant Road, Toronto

Click here -> Map

Cremation Time : Tuesday (Sep 14, 2010)  10:30 AM - 12:00 PM


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு : சிவகுமார் (416-729-0919)

                                          உருத்திரகாந்தன் (416-312-3223)

                                         அன்ரூபாலா (416-722-2574)

 

Sep 05 2010

திருமதி செல்வதி தம்பிஐயா (ஐயாப்பா)

பிறப்பு : ஒக்ரோபர் 05, 1931   இறப்பு : செப்ரெம்பர் 05, 2010

வேலணை கிழக்கு, 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா செல்வதி அவர்கள் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு, கைராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அவர்களின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா(ஐயப்பா - சிவத்தொண்டர்) அவர்களின் அன்பு மனைவியும், கோமளேஸ்வரி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற வேலணையூர் மாமனிதர் குமாரசாமி(J.P), புவனேஸ்வரி, தர்மபாலன், ராஜேஸ்வரி, சந்திரசேகரம்(சுவிஸ்), தில்லைநடராசா(பிரான்ஸ்), சிவபாலன்(இலண்டன்), சிவகுமார்(கனடா), சிவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சோதிமலர், ஆனந்தராசா(சுவிஸ்), ஞானேஸ்வரி, ரவீந்திரன்(இலண்டன்), வளர்மதி(சுவிஸ்), வானதி(பிரான்ஸ்), சசிகலா(இலண்டன்), யசோதா(கனடா), நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், அனிதா, கிரிஜா, நிவேதிதா, கபிலன், அர்ச்சனா, அஞ்சனா, நாகர்ஜினன், மலைவாணன், நாகதீபன், அனுந்திகா, விந்துஜன், விதுர்சன், இலக்கியா, அகல்யா, தர்சிகா, சஞ்சா, கஜானன், தனுஷா, சிவனுஜா, தேனுஷா, அகரன், அஷ்வத், வைஸ்ணவி, பிரியங்கன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 06.09.2010 திங்கட்கிழமை அன்று பி.ப 4:30 மணிக்கு பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தர்மபாலன் — இலங்கை; தொலைபேசி: +94114877075; செல்லிடப்பேசி: +94778012226
சந்திரன் — சுவிட்சர்லாந்து; தொலைபேசி: +41326854287
இராசன் — பிரான்ஸ்; தொலைபேசி: +3343842377
சிவம் — பிரித்தானியா; தொலைபேசி: +442086069833
குமார் — கனடா; தொலைபேசி: +14167432033

 

Aug 23 2010

திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 23-08-2010 திங்கட்கிழமை வேலணையில் காலமானார் .அன்னாரின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை (24-08-2010) வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

July 06 2010

திருமதி இராஜலிங்கம் பூமணி

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராஜலிங்கம் பூமணி  அவர்கள்  06-07-2009 அன்று பிரான்ஸில் காலமானர்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

April 28, 2010

திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை)

முன்னாள் பிரபல வர்த்தகர் (எப்பாவலை)

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திரு காங்கேசு பாலசிங்கம் (எப்பாவலை) அவர்கள் 28-04-2010  புதன்கிழமை வேலணையில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற காங்கேசு-கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,  சுஜிதா(நோர்வே), ரஜிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சசிகரன், தயாளராஜா ஆகியோரின் மாமனாரும், ஜெனிசா, சாரூஜன், தருசனா, ரஸ்னா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் நாளை (29.04.2010) வியாழக்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

April 20, 2010

திரு தில்லையம்பலம் செல்வராசா
(இளைப்பாறிய ஆசிரியர்)

தோற்றம் : யூன் 12, 1935    மறைவு : ஏப்ரல் 20, 2010

வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும் காரைநகர் மணற்காடு அம்மன் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு தில்லையம்பலம் செல்வராசா (செல்வராசா வாத்தியார்) அவர்கள் 20-04-2010 செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற தில்லையம்பலம்-செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சீவரத்தினம்-பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற லீலாவதி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும் செல்வரூபி, காலஞ்சென்ற செல்வஅருளினி, செல்வஜெயந்தினி, செல்வசுதர்சினி, செல்வகலாஜோதி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்கந்தராஜா, செல்வராஜா, தர்மரட்ணம், உதயகுமார் ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்ற இரத்தினம், பராசக்தி, காலஞ்சென்ற குமாரசாமி, ராசமணி, தவமணி, புவனேஸ்வரி, கமலாம்பிகை, செல்லத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தர்சிகா, நிருஷா, தாரணி, நிமலன், நிரோஷன், அபினா, ஆதித்தின், சாயிராஜ், சங்கீதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 21.04.2010 புதன்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது மகள் இல்லத்தில்(214/23, ராமநாதன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்) என்னும் இடத்தில் நடைபெற்று தகனக்கிரியைகள் கொக்குவில் இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

Mar 10, 2010

திரு சிவசம்பு கேதீஸ்வரன்

 

 

தோற்றம் 29-01-1960     மறைவு 10-03-2010

வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு சிவசம்பு கேதீஸ்வரன் (சின்ன ஈசன்) அவர்கள் 10-03-2010 அன்று பிரான்சில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-03-2010 திங்கள்கிழமை பிரான்சில் நடைபெறும். இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Mar 03, 2010

திருமதி ராசம்மா குலசேகரம்பிள்ளை

வேலணை கிழக்கு, 3ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசம்மா குலசேகரம்பிள்ளை நேற்று 03.03.2010 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வள்ளிபுரம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் செல்லமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும், லீலாவதி, புனிதவதி, இந்திராணி ஆகியோரின் அன்புத் தாயாரும், கந்தசாமி, தம்பிஐயா, சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, சோமசுந்தரம் மற்றும் சண்முகராஜா, ஐயாத்துரை, காலஞ்சென்ற சிவராசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சசிகுமார், சசிகலா, சாந்தநிதி, சந்திரகுமார், சரண்யா, தர்சினி, சுபாசினி, கமலினி, கஜன், சிவலக்சன், சில்வியா ஆகியோரின் அன்பு பேர்த்தியாரும், கௌசிகா, டிலக்சனா, லகீசன், நிரூஷன், விதுஜா, விரிஷா, மீனா, விக்னேஸ்வரன், டிலான், ஜாலினி, கஜிபன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாட்டி இந்துமயானத்திற்கு இன்று (04.03.2010) வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின் றோம்.


 

Dec 31, 2009

திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை

வேலணை கிழக்கு 2ம் வட்டாரம் திருமதி இராசலெட்சுமி சபாபதிப்பிள்ளை அவர்கள் வேலணையில் 31.12.2009 வியாழக்கிழமை காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.01.2010 சனிக்கிழமை அன்று வேலணையில் நடைபெற்றது. இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

Nov 05, 2009

திரு எட்வேட் அமிர்தலிங்கம் (அமுதம்)


வேலணை கிழக்கு, 3
ம் வட்டாரம், அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட்  அமிர்தலிங்கம் 05.11.2009 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற எட்வேட் (செல்லையா) தங்கச்சியம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்ற திருவிளங்கம் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் மனோன்மணியின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான நல்லையா (ஆசிரியர்), செல்வராசா, குணரட்ணம் மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் உதயகுமார், சசிகுமார் ஆகியோரின்  பாசமிகு தந்தையும் நாகேஸ்வரி, ஜெசிதா ஆகியோரின் அன்பு மாமனும் நிர்மிதா, அஜந்தன், அட்சயா, அவிநியா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வேலணை இல்லத்தில் நாளை (08.11.2009) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று, பூதவுடல் வேலணை, சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

 

Oct 10, 2009

 திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை (குச்சாண்டி)


வேலணை கிழக்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் வள்ளியம்மை (குச்சாண்டி) அவர்கள் 16-10-2009 அன்று வேலணையில் காலமானார். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

July 21, 2009

திரு விசுவலிங்கம் கைலாயபிள்ளை

வேலணை கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவரும் மன்னாரில் தற்காலிகமாக வசித்து வந்தவருமான விசுவலிங்கம் கைலாயபிள்ளை அவர்கள் 21-07-2009 செவ்வாய்கிழமை வேலணையில் காலமானார். இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

தகவல் : பெறாமகன் மு.ஜெயரூபன்
இலண்டன் 07734693739

 

July 12, 2009

திரு நல்லதம்பி போசராஜா

திரு நல்லதம்பி  போசராஜா  அவர்கள் 12-07-2009 அன்று வேலணையில் காலமானார்.

 

June 08, 2009

திரு நடராசா சரவணபவன் (ராசன்)

வேலணையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், கொட்டடியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவரும் தற்போது அத்தியடியில் வசித்தவருமாகிய நடராசா சரவணபவன் (ராசன்) நேற்று (08.06.2009) திங்கட்கிழமை அதிகாலை காலமாகி விட்டார்.
 அன்னார் அமரர்களான செல்லையா நடராசா (முன்னாள் அரச மரக் கூட்டுத்தாபனம்), திலகவதி தம்பதியினரின் அன்பு மகனும் யோகலட்சுமியின் பாசமிகு கணவரும் சுபகரன், நிரஞ்சனா, கிரிஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் திருமதி கிருஸ்ணாம்பிகை, திருமதி இராஜேஸ்வரி, திருமதி விஜயலட்சுமி (பிரான்ஸ்), திருமதி வீரலெட்சுமி (கனடா), ராஜகோபாலன் (பாலுபிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான இராசேந்திரன் (கனடா), அருள்நந்தி (கனடா) மற்றும் திருமதி பத்மாவதி (லண்டன்), ஆனந்தன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.06.2009) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
 

 

May 14, 2009

திரு குலசேகரம்பிள்ளை இளங்கோ

மலர்வு 07.08.1975   

 

மறைவு 24.05.2009

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் விசுவமடுவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குலசேகரம்பிள்ளை இளங்கோ அவர்கள் 14.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் அகாலமரணமானார்.

அன்னார், குலசேகரம்பிள்ளை, காலஞ்சென்ற முத்துலெட்சுமி ஆகியோரின் அன்புமகனும், பாலசிங்கம், காலஞ்சென்ற ஞானேஸ்வரி ஆகியோரின் மருமகனும், சற்குணேஸ்வரியின் அன்புக்கணவரும், சஞ்சீவன், சஞ்சீகா, சானுஜன் ஆகியோரின் பாசமிகுதந்தையும், குலராசவதி(யாழ்ப்பாணம்), இளந்திரை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரனும், சதீஸ்வரன்(பிரான்ஸ்), சிவகாமசுந்தரி(ஜேர்மன்), உதயகுமார்(வவுனியா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
திரு குலசேகரம்பிள்ளை - இலங்கை 0094 774478305
திரு திருமதி இளந்திரை - சுவிஸ் 0041 344222745
திருமதி மனோன்மணி - இலங்கை 0094 242222008
திரு திருமதி யோகரெத்தினம் - பிரான்ஸ் 0033 160788722
திரு திருமதி சதீஸ்வரன் - பிரான்ஸ்
0033 169913909

 

April 19, 2009

திரு எட்வேட் செல்வராசா (பிரக்கிராசி)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு எட்வேட் செல்வராசா (பிரக்கிராசி) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை 19-04-2009 அன்று பிரான்ஸில் காலமானார்.
 

Feb 28, 2009

திரு இராசதுரை நரசிங்கம்

மலர்வு 17.06.1936     மறைவு 28.02.2009

வேலணையை பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசதுரை நரசிங்கம் அவர்கள் 28.02.2009 அன்று காலமானார். அன்னார், காலம் சென்றவர்களான இராசதுரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும். யோகவதியின் அன்புக் கணவரும், இறஞ்சிதமலர்(கனடா), இன்பமலர்(ஜேர்மனி), நவகுமார்(ஜேர்மனி), வசந்தமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னார் சிவகுமார்(கனடா), சாந்தகுமார்(ஜேர்மனி) , வளர்மதி(ஜேர்மனி) , ஸ்ரீபரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமானாரும், கமலாதேவி, சகுந்தலாதேவி, மல்லிகாதேவி, இலட்சுமிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், கஜன், பிரணவன், கேதவன், சிந்துஷா, தனுஷா, சஜிதீபன், லெட்சனா, தர்சனா, விதுனா, வைஷ்ணவி, வர்ஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் வவுனியாவில் இடம்பெறும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
நவகுமார் (ஜேர்மனி)  ---- 49 6571149548
இன்பமலர் (ஜேர்மனி) --- 49 6831703759
இறஞ்சினி (கனடா) --- 416 266 8735
வசந்தி (கனடா) --- 905 940 3076

 

Jan 20, 2009

திரு திருநாவுக்கரசு கந்தையா

வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை சேர்ந்த திருநாவுக்கரசு கந்தையா அவர்கள் 20-01-2009 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இவர் காலஞ்சென்ற கந்தையா- தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவமணியின் அன்புக் கணவரும், கேதீஸ்வரி - சந்திரமோகன், கோனேஸ்வரன்-கவித், விக்நேஸ்வரன்-சிஜாந்தி, சர்வேஸ்வரி (சசி)-குமரவேல், ஜெகதீஸ்வரன்-சஜி, மஞ்சுளா ஆகியோரின் அன்புத்தந்தையும், காலஞ்சென்ற மனோன்மணி, கமலாம்பிகை, பாக்கியம், கனகசபாதி பாலசிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

தகவல்: மகள் கேதீஸ்வரி - சந்திரமோகன் (கனடா)   (416)514-0530

 

Jan 17, 2009

திரு கோபாலபிள்ளை செல்லையா


வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை சேர்ந்த கோபாலபிள்ளை செல்லையா அவர்கள் 17-01-2009 அன்று வவுனியாவில் காலமானார். இவர் மகாலட்சுமியின் அன்புக் கணவரும் ஜெயந்தி, ஜெயகுமார், ஜெயசுதா, ஜெயசங்கர் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2009 திங்கக்கிழமை வவுனியாவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

Dec 23, 2008

Mr Mahalingam Visuvalingam

Nov 25, 2008

திரு நாகலிங்கம் சிவஞானம்


வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவஞானம் அவர்கள் 25-11-08 அன்று கிளிநொச்சியில் காலமானார். இவர் சிவயோகத்தின் அன்புக் கணவரும் மதியாபரணம், மாசிலாமணி, சின்னத்துரை, அனுசம்மா, சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும் பேரின்பராசா, கருணாகரன், மலர்(கனடா), சிவகரன், லோசினி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: மகள் மலர் (கனடா) 
 (416)665-04635

 

Nov 19, 2008

திரு அருள்ராஜா நடராஜா (அருள்)


வேலணை கிழக்கை சேர்ந்தவரும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட அருள்ராஜா நடராஜா (அருள்) அவர்கள் 19-11-2008 கனடாவில் காலமானார். அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை
(மாலை 5 மணி முதல் மாலை 9 மணி வரை)
பார்வைக்கு வைக்கபட்டு இறுதிக்கிரியைகள் 24-11-2008 திங்கக்கிழமை (மதியம் 12 மணியில் இருந்து மாலை 2 வரை)  நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

Viewing Hall:

4164 Sheppard Avenue East  (Midland Ave/ Sheppard Ave E)

Click here ->  Ogden Funeral Homes

 

Cemetery & Cremation Place:

256 Kingston Road (Kingsron Rd/ Woodbine Rd)

Click here ->   St John's Norway Cemetery & Crematorium

தகவல்: நிந்தியானந்தன் (ஆனந்தன்) நடராஜா  905-294-8601

 

Sep 16, 2008
 

திருமதி செல்லம்மா சின்னையா

 

தோற்றம்: 23-04-1922   மறைவு:10-09-2008

வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லமா சின்னையா அவர்கள் 10-09-2008 புதன் கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்ற சின்னையாவின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா காசிலிங்கம் அன்னலட்சுமி, சித்திரவடிவேல்(யாழ்பாணம்), சரஸ்வதி(ஜேர்மனி), யோகவதி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும், காலம் சென்ற பூபதி, காலம் சென்ற இராசரெத்தினம், வரதலெட்சுமி ஆகியோரின் அன்புத்தாயாரும், காலம் சென்ற சுந்தரலிங்கம் (தபால் ஊழியர் கோண்டாவில்), திலகவதி, தங்கராசா(மகான்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதாசினி (ஆசிரியை -கிளிநொச்சி), சுதர்சன், கோகிலன், இராஜரூபன், இராஜதீபன், இராஜினி, டயனா, தர்மசீலன்(ரகு), தர்சினி(றதி), நந்தினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் கிளிநொச்சியில் நடைபெற்றன. இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்நரசிங்கம் யோகவதி - கனடா - (416) 759-5239

 

 

June 14, 2008
 

 

நடராசா சற்குணம்


வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் நடராசா சற்குணம் அவர்கள் 14-06-2008 சனிக்கிழமை இந்தியாவில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-06-2008 வியாழக்கிழமை இந்தியாவில் நடைபெறும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

March 09, 2008

Mr Sothidar rasa (son) Rajendran

Mr Sothidar rasa (son) Rajendran Passed Away on 03/09/2008 at Esumoddai, Jaffna.
 
Bala 514-387-7462
Ragu 905-927-1991

 

February 09, 2008

 

Click here

From Jaffna

From Swiss

 

January 21, 2008

Mr Kanthan Sabathy

Mr Kanthan Sabathy passed away on January 20, 2008 at Velanai.

 

August 07, 2007

திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம்

வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில்லடியைப் பிறப்பிடமாக கொண்ட திரு. தமோதிரம்பிள்ளை காசிலிங்கம் அவர்கள் ஆவணி மாதம் 07, 2007 கொழும்பில் காலமானார். இவர் திரு/திருமதி தாமோதரம்பிள்ளை அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பராசக்தி அவர்களின் கணவரும் அவார்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேரி எண்: +33160779238

 

April 22, 2007

Mr Kathikesupillai

Mr Kathikesupillai passed away on April 22, 2007 at Velanai.

Dec 15, 2006

Mrs Leelavathy Selvarajah

Mrs Leelavathy Selvarajah passed away on December 15, 2006 in Jaffna.

 

Dec 02, 2006

Mr Navasivayam Sivapalan

Mr Navasivayam Sivapalan passed away on December 02, 2006 in Paris, France.  He was son of Navasivayam and Sagunthalathevy (Vavuniya), brother of  Sivarasan (Vavuniya), sister of Mahathevy (Vavuniya), brother in law: of Nesan (Vavuniya).

 

 

Oct 20, 2006

Mr Sinnappu Arumugam

Mr Sinnappu Arumugam (Punkudutheevu) passed away on October 20, 2006 at Velanai.  Cremation on 22nd October, 2006 on Sunday at Velanai.

Oct 04, 2006

Mr Muththuthamby Tharmalingam (Rasan)

Mr Muththuthamby Tharmalingam (Rasan) passed away on October 04, 2006 in Canada

 

Jan 14, 2006

Mr Ethiveerasingam

 

Mr Ethiveerasingam passed away on January 14, 2006 at Colombo.  Cremation on 16th January, 2006 on Monday at Colombo.

 

Oct 09, 2005

KMrs Thilagavathi (Kili) Nadarajah

Mrs Thilagavathi (Kili) Nadarajah expired on October 09, 2005 at Canada.  View on 15th October Saturday from 5:00 PM to 9:00 PM.  Cremation on 17th October  Monday 10:00 AM at Toronto, Canada.

 

Sep 14, 2005

KMrs Paramsothi

Mrs Paramsothi expired at Velanai.  Cremation on 18th September  Sunday at Velanai.

 

Aug 20, 2005

Kanagalingam Sothilingam (Sothi)

Kanagalingam Sothilingam expired at Colombo.  Cremation on 24th August Wednesday at Colombo.

 

July 2005

KMrs Sellamma

 

Mrs Sellamma expired on July 2005 at Velanai.

 

Feb 02, 2005

 

KMrs Pakkiyam Kanagaratnam

 

 

 

Nov 09, 2004

Sep 16, 2004

Aug 29, 2004

 

July 16, 2004

May 29, 2004

Feb 07, 2004

Dec 11, 2003

Dec 05, 2003

Nov 19, 2003

 

Oct 12, 2003

Oct 08, 2003

Oct 06, 2003